Friday, June 19, 2015

அயோடின் அளவு குறித்த ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் அளவு குறித்த  ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டதுஇதற்காக உப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டதுமாநில அளவில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு இந்த ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழுவுடன் இ​ணைந்து கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் உதகை மார்க்கெட் மற்றும் உதகை வட்டத்திற்குட்பட்ட 20க்கும் மேற்ப்பட்ட கடைகளில் சுமார் 30 பாக்கெட் உப்புகள் வாங்கி அவை திருவாரூருக்கு பரிசோதனைக்காக எடுத்து அனுப்பபட்டுள்ளதுமுன்னதாக பந்தலூர் வட்டத்திலும் சுமார் 30 பாக்கெட்  உப்பு மாதிரிகள் எடுத்து அனுப்பபட்டுள்ளது.
 இதன் ஆய்வு முடிவுக்கு பின் ஆய்வின் அறிக்கை கிடைத்தபின் அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்  ஒருங்கி​ணைப்பாளர் தனிஸ்லாஸ் (பந்தலூர்) மாரிமுத்து (உதகை) மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் ஆகியோர் உதகை வட்டத்தில் உப்பு மாதிரிகள் எடுத்தனர்.  

No comments:

Post a Comment